புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014


மு.க. அழகிரிக்காக சமாதானம் பேச வந்த கே.பி.ராமலிங்கத்துக்கு கருணாநிதி எச்சரிக்கை

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கருணாநிதி ஏப்ரல் 7-ஆம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்றைய தினம் இரவு ஈரோட்டில் லீ ஜார்டின் ஹோட்டலில்
தங்கியிருந்தார் கருணாநிதி.  அவரை மு.க.அழகிரியின் ஆதரவாளர் கே.பி.ராமலிங்கம் சந்தித்துப் பேசியுள்ளார்.
மு.க.அழகிரி தவறு ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். ஆனால் அதை கருணாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் வைகோவுடன் இணைந்து செயல்படுவது துரோகமில்லையா என்று கடுமையாகப் பேசியதுடன், கே.பி.ராமலிங்கத்தையும் கட்சியை விட்டே எடுத்துவிடுவேன் என்று கருணாநிதி எச்சரித்து அனுப்பினாராம்.

ad

ad