புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014


மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல்:-

மன்னாரில் இருந்து வெளிவரும் புதியவன் நாளிதழின் ஆசிரியர் வி.எஸ். சிவகரன் என்பவருக்கு வடமாகாண சபை உறுப்பினர்; றிப்கான் பதியூதீன் இன்று (10) மாலை அலுவலகத்திற்கு
சென்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக புதியவன் ஆசிரியர்; இன்று மாலை 5.30 மணியளவில் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

மன்னார் பிரதான வீதி சின்னக்கடை என்ற முகவரியில் புதியவன் நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த பத்திரிகையில் நேற்று(09) புதன்கிழமை காணி அபகரிப்பு தொடர்பான எவருடைய  பெயரும் குறிப்பிடாமல் ஆதாரபூர்வமான செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று (10) மாலை 04.45 மணியளவில் பத்திரிகை அலுவலகத்திற்கு அவரது அடியாட்களுடன் சென்று பத்திரிகையின் ஆசிரியரை குறித்த செய்தி தொடர்பில் வினவியதோடு பத்திரிக்கை ஆசிரியரோடு கடும் தொனியில் மிரட்டியதுடன் அவரை கொலை செய்வதாதகவும் பத்திரிக்கை அலுவலகத்தை எரியூட்டுவதாகவும் அச்சுறித்தியுள்ளார். இவ் அச்சுறுத்தல் தொடர்பில்; மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்தார்.

ad

ad