மூவரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது மத்திய அரசு.
விசாரணைக்கு பிறகு, மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.