தமிழர் பாரம்பரியம் மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் காரைநகர் விளையாட்டு விழா
காலை 1.30 மணியளவில் இடம்பெறவுள்ள விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களுக்கான 28 வெற்றிக் கிண்ணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்த விளையாட்டு விழா தமிழரின் பாரம்பரியத்தை மீண்டும் புத்துயிர் பெறவைக்கும் விழாவாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.