புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

ஒரே நாளில் சோனியா காந்தி, நரேந்திரமோடி தமிழகத்தில் போட்டி பிரச்சாரம்
 



 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையில் தேசிய தலைவர்கள் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரியில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக குமரி அருகே முருகன் குன்றம் பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை மற்றும் சுற்றுப்புரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதன்கிழமை கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதன்கிழமை இரவு கோவையில் தங்குகிறார். வியாழக்கிழமை நாகர்கோவில், இராமநாதபுரம், ஈரோடு ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ad

ad