புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014


ராஜீவ் கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிட மோடி ஏன் வலியுறுத்தவில்லை?- மத்திய அமைச்சர் கேள்வி
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட வலியுறுத்திய பாஜக தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட ஏன் வலியுறுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறுகையில்,
நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியின் எந்த தலைவரும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கில் போடுவது குறித்து பேசியதாக எங்களுக்கு தெரியவில்லை.
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசினர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக 20 ஆண்டுகாலமாக அமைதியாக இருக்கிறார்கள்.
அவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. வாக்குகளை குறிவைத்தே பேசுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகாலமாக ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மோடி ஏன் வலியுறுத்தவில்லை என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

ad

ad