புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2014

டோனியின் வாக்குமூலத்தை பி.சி.சி.ஐக்கு வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!
கடந்த ஐபில் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் தலைமையிலான
குழு டோனி, சீனிவாசன் மற்றும் சுந்தர்ராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின்படி, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் ஒதுங்க நேரிட்டது.

இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், முத்கலிடம் மூன்று பேரும் அளித்த வாக்குமூல காணொளி மற்றும் எழுத்துப்பூர்வ பிரதிநிதிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று பி.சி.சி.ஐ., கோரிக்கை வைத்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே பட்நாயக் மற்றும் ஜெ.எஸ்.கேஹர் அடங்கிய குழு காணொளி ஆதாரத்தை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ad

ad