புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2014

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை- வடக்கு விவசாய அமைச்சர் குற்றச்சாட்டு 
வடமாகாணத்தின் விவசாயத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் பல இடங்களில் வெய்யிலிலும் மழையிலும் கிடந்து பழுதடைந்து கொண்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கமநலசேவைகள் திணைக்களத்தைக் குற்றம் சாட்டியுள்ளார்.
 
கடந்த திங்கட்கிழமை  யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 
வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்தை முடக்குகின்ற வகையிலேயே மத்திய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. 
 
கமநலசேவைகள் திணைக்களம் பொருளாதார அமைச்சின் கீழ் தற்போது உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்தத்திணைக்களம் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் ஒத்திசைந்து செயற்பட மறுக்கிறது. 
 
கமநலசேவைகள் திணைக்களத்தின் கீழ் வருகின்ற விவசாய சம்மேளனங்கள் பல இடங்களில் பல வருடங்களாகத் தேர்தல் நடாத்தப்படாமல் செயற்திறன் குன்றியவையாக உள்ளன.
 
இந்திய அரசாங்கம் வடமாகாணத்துக்கென வழங்கிய 500 உழவூர்திகளும் கமநலசேவைகள் திணைக்களத்தினூடாகவே விநியோகிக்கப்பட்டன. 
 
இந்த உழவூர்திகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இவற்றுக்கு உழவுப் பெட்டிகளை வழங்குவது பொருத்தமானது என்று கருதினோம். 
 
அதற்காக உழவூர்திகள் தற்போது எங்கே? எவரது பராமரிப்பில் உள்ளது? அவற்றின் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது? போன்ற விபரங்களைத் தந்து உதவுமாறு எனது அமைச்சின் செயலாளர் மூலம் கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம். பல மாதங்கள் ஆகியும் உரிய பதில் கிடைக்கவில்லை. 
 
மத்திய பொருளாதார அமைச்சிடம் இருந்து மாகாண விவசாய அமைச்சுக்கு இந்தத் தகவல்களை வழங்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad