அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார்: அன்னா ஹசாரே
டெல்லியில் நான் முதல்-மந்திரியாக பதவியை ராஜினமா செய்தது எனது தவறுதான் என்றும், முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேறியது எனக்கு நேரம் சரியில்லாததால் இதுபோன்றவை
நடந்துள்ளது என்று முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் ஆலோசகர் அன்னா ஹசாரே, பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
ரலோகான் சித்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘’ ஆம் ஆத்மி அரசு டெல்லியில் ராஜினாமா செய்ய முடிவு எடுத்த தருணம் மிகவும் தவறானது. ஆனால் கெஜிரிவால் பிரதமர் ஆக வேண்டும் என்ற என்ணத்தில் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த நேரத்தில் இது தவறான முடிவு என்று நான் கூறியிருந்தேன்.
டெல்லி மாதிரி மாநிலமாக உருவாக்கிய பின்னர் கெஜ்ரிவால் போட்டியிட்டு இருந்தால் அடுத்த தேர்தலில் நாடு அவரதுபிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் முதல்வர் பதவியை துறந்தார் கேஜ்ரிவால்: ஹசாரே
டெல்லி முதல்வர் பதவியை அவசரப்பட்டு விலகிவிட்டது தவறு என்று கேஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டுதான், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை துறந்தார் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறினார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிய போது அது தவறான முடிவு என்று நான் கூறியிருந்தேன். ஆனால், இப்போதுதான், கேஜ்ரிவால் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையால்தான், முதல்வர் பதவியை துறந்துள்ளார் என்பது புரிகிறது என்று அண்ணா ஹசாரே கூறியிருக்கிறார்.
ஆம் ஆத்மி கைக்கு சென்றிருக்கும்’’ என்றார்.