புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு
சென்னையில் ஆண்டு தோறும் பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



பாமக நடத்தும் சித்திரை முழு நிலவுக் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முழு நிலவு நிகழ்ச்சியில் நீதிமன்ற விதிகளை பாமகவினர் மீறியதாகவும், பல இடங்களில் வன்முறை வெடித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad