புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


கலைஞரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஜெயங்கொண்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள சிலால், கோடங்குடி, பொற்பதிந்தநல்லூர்,
நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டிபஜார், அழிச்சுக்குடி, சித்தமல்லி, நாச்சியார்பேட்டை, நத்தவெளி, விக்கிரமங்கலம் அருள்மொழி உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.


முன்னதாக சிலால் எனுமிடத்தில் பிரசாரத்தை தொல்,திருமாவளவன் தொடங்கி வைத்துப் பேசியபோது,  ‘’ தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்கப்படும் 18 சதவீத இடஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு, அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஆகிய வற்றை பாதுகாத்தது கலைஞர்தான். வேறு எந்த தலைவரும் கிடையாது.
ஜெயலலிதா பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கருத்தை கொண்டவர். அது பாஜகவின் கருத்து. இடஒதுக்கீடு கொள்கை காப்பாற்றப்பட வேண்டும், இஸ்லாமிய, கிருஸ்துவ, சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு பாதுகாக்க வேண்டும், மதவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை கலைஞருக்கு மட்டுமே உள்ளது. எனவே ஓட்டுமொத்த தமிழினத்தில் பாதுகா வலராக திகழும் கலைஞரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்’’ என திருமாவளவன் தெரிவித்தார்.

ad

ad