புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

முல்லைத்தீவில் பொதுஅமைப்புகளின் அதிகாரத்தை கைப்பற்றும் கூட்டமைப்பு – புலனாய்வுப்பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நகர்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து, சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, முல்லைத்தீவில் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகளினதும் அதிகாரத்தை கைப்பற்றும்படி தமது ஆதரவாளர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையடுத்து, புலனாய்வு அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈழ அரசை அமைக்கும் கனவை நிறைவேற்றுவதற்கு தற்போது செயலற்றுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புதுப்பிப்பது அல்லது அதுபோன்றதொரு தீவிரவாத அமைப்பைத் உருவாக்குவதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம், என்று பார்க்க வேண்டியுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

ad

ad