புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2014

மகளின் சாவுக்கு பாதிரிமாரே காரணம்; தந்தை சாட்சியம் 
என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம் என குருநகர்ப்பகுதியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றாவின் தந்தையார் மன்றில் சாட்சியம் அளித்தார்.


கடந்த 13ஆம் திகதி பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போதே நீதவான் சிவகுமார் முன்னிலையில் தந்தையார் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

எனக்கு ஐந்து பிள்ளைகள் அவர்களில் ஜெரோமி கொன்சலிற்றா எனது இரண்டாவது மகள்.  இவரும் அடப்பன் வீதியில் எங்களுடனேயே வாழ்ந்து வந்தவர்.

கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து பூங்காவிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. நாம் இரவு 12மணி வரையும் தேடினோம். மகள்  தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

மறுநாள் வீதியில் சென்றவர்கள் பெரியகோயிலுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் பெண் ஒருவரது சடலம் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாகச் சென்று பார்த்த போது குறித்த சடலம் எனது மகள் என்று அடையாளம் கண்டுகொண்டேன்.

எங்கள் வீட்டில் இருந்து குறித்த கிணறு 100 மீற்றர் தூரம். அத்துடன் பாதுகாப்பாக மூடி மதில் கட்டப்பட்டுள்ள கிணறாகவும் இருக்கின்றது.

எனது மகளுக்கு 2பாதிரிமார்களால் பாலியல் வற்புறுத்தல் இருந்தமையினால் அவர் மனஉளைச்சலிலேயே இருந்தார்.
"என்ன நடந்தது என்று தெரியேல்ல கொலை என்றே நாம் நினைக்கிறோம்". "எனது மகள் இறந்ததிற்கு பெரியகோயிலில் இருக்கும் 2 பாதர்மார் தான் காரணம் என சந்தேகம்" என்றார். 

ad

ad