தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார்
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த அலெக்சாண்டருக்கு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையை ஜெய லலிதா வழங்கினார்.
கடந்த சில தினங்களூக்கு முன்பு முன்னாள் காவல்துறை டிஜிபி நட்ராஜ் அதிமுகவில் இணைந்தார்.