மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாணவி
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. சென்னை பாடி ஸ்பார்ட்டன் பள்ளியில் படித்த மாணவி ஷ்ரிதி அன்பு, பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதே பள்ளியில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவி செ-னா ஏஞ்சலின் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.