17ம் தேதி ஜனாதிபதியிடம்
ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார் மன்மோகன் சிங்
மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.
அடுத்த முறை பதவி ஏற்கப்போவதில்லை என்று மன்மோகன் சிங் உறுதியாக கூறிவிட்டார். இதனைய டுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை வருகிற 17ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வழங்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக அவர் மந்திரி சபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார்