புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


பம்பலப்பிட்டி இந்து கல்லூரி ஆசிரியர் தற்கொலை! இன்று கல்லூரி இயங்கவில்லை
பம்பலப்பிட்டி இந்து கல்லூரி விடுதியில் தங்கியிருந்த உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியளவில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிஸாரின் தகவலுக்கு அமைய இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி, இலுக்கேன, பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான பிரான்சிஸ் கெம்லஸ் என்ற ஆசிரியரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சட்டமருத்துவ அதிகாரியின் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது இது ஒரு கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  
இதேவேளை, குறித்த பாடசாலையில் இன்று கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ad

ad