புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


சுவிசில் நடை பெற்ற மரதன் போட்டியில் தமிழின அழிப்புக்கு எதிராக தமிழர் 
கலந்து  கவனயீர்ப்பு  ஒன்றை இளைஞர்  நேற்று இடம்பெற்றுள்ளது
பேர்ண் க்ராண்ட் பிறிக்ஸ் 2014 (GRAND PRIX BERN 2014 )" 16.3 கி.மீ ஓட்டப் பந்தயத்தில் எமது தமிழின உணர்வாளர்களும், இளையோரும் இணைந்த 10 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு பங்குபற்றிப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

சுவிஸ் பேர்ண் நகரில் ஏறத்தாழ 33,000 போட்டியாளர்கள் சர்வதேச ரீதியாகக் 
அகவணக்கத்துடன் "மே- 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து எமது இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை எமது இலட்சியப் பயணம் எம்மால் முடிந்த வழிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென உறுதிமொழி எடுக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற எமது தாரகமந்திரத்துடன் பயிற்சிகளை ஆரம்பித்தார்கள்.
பி.ப 16.40 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளில் பங்குபற்றியிருந்த வீரர்கள் "ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிரான ஓட்டம்" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ரிசேர்ட்டை அணிந்திருந்தார்கள்.
ஸ்ரீ லங்கா அரசின் தமிழின அழிப்பு சார்ந்த விளக்க துண்டுப்பிரசுரங்களும் பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன‌.
இக்கவனயீர்ப்பு மரதன் ஓட்டமானது கலந்துகொண்ட போட்டியாளர்கள், பார்வையாளர்களினதும் கவனத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வேற்றின மக்கள் இப்போட்டிகளைக் கண்டுகளித்தார்கள்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

ad

ad