புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 26 ம் திகதி காலை 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம்  முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
 
 
பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்துள்ள நூற்றுக் கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாது, உறவினர் நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.  
 
 
இந்த உண்மை நிலையை மூடிமறைத்து அரசு தனது உள்ளுர் அதிகாரிகளை வற்புறுத்தி  உண்மைக்குப் புறம்பான தகவல்களை சர்வதேச சமூத்திற்கு வெளிப்படுத்திவருகின்றது. பொய்யான அறிக்கைகள் மூலம் இங்கு இனநல்லிணக்கம் ஏற்பட்டுவருதாக உலகை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. 
 
 
மறுபுறத்தில் உள்ளுர் அரச அதிகாரிகள் மூலம் மக்களது சொந்த விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான முற்சிகளிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 
 
 
ஆனாலும் தமது சொந்த வீடுகளும் நிலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கு ஆவன செய்ய வேண்டுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
எனவே இடம்பெயர்ந்து ஐந்து ஆண்டுகளாக அவல வாழ்வு வாழும் மக்களது வீடுகள் நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, அம்மக்கள் உடனடியாக மீள் குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும் என்று கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
 
இதேவேளை யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்கள் தவிர்ந்த அனைத்து இடங்களிலும் மக்கள்  முழுமையாக மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கச்சேரி பல மாதங்களுக்கு முன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad