புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014

சிறுமியின் கற்பை சூறையாடிய 38 காம கொடூரர்கள்
மலேசியாவில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 38 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் கெலான்டன் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தோழியை சந்திக்க சென்றிருந்தார்.
பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருக்கையில், அங்கு மர்ம கும்பல் ஒன்று வந்து அச்சிறுமையை கடத்தி சென்றது.
இதன்பின் குடிசை ஒன்றினுள் சிறுமியை அடைத்த அந்த கும்பல் அவளை கற்பழித்துள்ளது.
இதுகுறித்து பொலிசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டிருந்த 38 பேரின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 13 பேரை கைது செய்த பொலிசார், மாயமான 25 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த பெண்ணின் தோழியும் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிப்பதால், அவளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கற்பழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடும் தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் என அந்நாட்டின் இஸ்லாமிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

ad

ad