புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

பெரிய கோயிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களது தடைகளுக்கு மத்தியிலும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால்  குருநகர் பெரிய கோயிலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.


இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், பரஞ்சோதி, சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் , பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

எனினும் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்று காலை முதல் மார்ட்டீன் வீதி உயர் பாதுகாப்பு வலையம் ஆக்கப்பட்டு போக்குவரத்தும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 



ad

ad