புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014

மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற கணவன் மரத்தில் தூங்கி தற்கொலை 
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் கரிதாஸ் வீட்டுத்திட்டம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளதுடன்  அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
இந்த சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஐ; (வயது -30), அருள்ராஐ; செல்வகுமாரி (வயது - 28)
ஆகியோரே உயிரிழந்துள்ளனர். குறித்த இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குடும்ப தகராறு காரணமாக படுக்கையில் இருந்த மனைவியின் தலையை கணவன் கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர்; வீட்டிற்கு பின் நின்ற மரத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad