புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2014


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மனு செய்துள்ள 10 நிறுவனங்களின் மனுக்களை முதலில் விசாரிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்ய்யப்பட்டது.
இதை எதிர்த்து வாதாடிய அரசு உதவி வழக்கறிஞர், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கும், நிறுவனங்களின் வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே, சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ad

ad