புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

இங்கிலாந்திடம் வாங்கிக்கட்டியது இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள்  போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

 
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 50 ஓவர்களை கொண்ட சர்வதேச ஒரு நாள் சுற்றுப்போட்டியானது மழை காரணமாக 39 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது.
 
 
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது 39 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இங்கிலாந்து அணி சார்பாக பலன்ஸ் 64 ஓட்டங்களும், பெல் 50 ஓட்டங்களும், ஜோர்டன் 13 பந்துகளில் 38 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.
 
 
பதிலுக்கு 248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 32 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இலங்கையணி சார்பாக ஜெயவர்த்தன 35 ஓட்டங்களையும், டில்ஷான் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
 
 
இதன் மூலம் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்று 05 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிச்சுற்றில் 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. 
 
 
 
 

ad

ad