கிளிநொச்சி கவின்கலை கல்லூரியின் முதலாவது கலைப்பூங்கா விழா
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தனது மாணவர் மன்ற கலை வெளிப்பாடுகளை அரங்கேற்றியிருந்தது.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தனது மாணவர் மன்ற கலை வெளிப்பாடுகளை அரங்கேற்றியிருந்தது.
இதில் பிரதம விருந்தினராக முதுபெரும் மிருதங்க வித்வான் ஜயாத்துரை சிவபாதம் மற்றும் முதுபெரும் பாடகி பார்வதி சிவாபாதம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பல்வேறு பண்பாட்டு கலை நிகழ்வுகளை அரங்கில் மாணவர்கள் நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது. இதே வேளை விழிப்புலனற்ற மிருதங்க வித்துவான் கிருஸ்ணபிள்ளை சிறிகரன் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.