புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


லண்டனில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாட்டினால் சிறிலங்காவுக்குக் கலக்கம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடக்கவுள்ள அனைத்துலக மாநாடு, சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்காவில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதி, சாய்னாப் பங்குரா, சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கவலை வெளியிட்டிருந்ததுடன், மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்ற, இடம்பெறும் கவலைக்குரிய 21 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் இணைத்திருந்தார்.
இந்தநிலையில், லண்டன் எக்செல் நிலையத்தில் அடுத்த மாதம் 10ம் நாள் தொடக்கம் 13ம் நாள் வரை பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான அனைத்துலக மாநாட்டுக்கு ஐ.நாவின் அனுசரணையுடன் பிரித்தானியா ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பின் சிறப்புத் தூதுவர் ஏஞ்சலினா ஜொலி ஆகியோர் இந்த மாநாட்டுமுக்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.
கடந்த நொவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா வந்திருந்த போதே, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக், பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தநிலையில், அடுத்த மாதம் லண்டனில் நடக்கவுள்ள மாநாடு சிறிலங்காவுக்கு எதிரான களமாகவும் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தமக்கு எதிரான பரப்புரைகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், போரின் போதோ, போருக்குப் பின்னரோ, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad