மன்னிப்பு கேட்ட நரேந்திர மோடி
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பிரியாவிடை கொடுப்பதற்காக குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, கடந்த காலத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். தான் முதல் அமைச்சராக இல்லை என்றாலும், குஜராத் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.