புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


  
சென்னை அணி  8 விக்கேடுக்களால் வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது.  டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து டெல்லி அணி வீரர்கள் ஆட தொடங்கினர்.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காக் (24), விஜய் (35)
ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து பீட்டர்சன் (0), கார்த்திக் (51), சுக்லா (0) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  டுமினி (28) மற்றும் ஜாதவ் (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.  இதனை தொடர்ந்து சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் மெக்கல்லம் (32) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  ஸ்மித் (79) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ரெய்னா (47) ரன்களுடனும், தோனி (12) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.  சென்னை அணி 19.4 ஓவர்களில் 181 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad