புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014

மோடி பதவியேற்பு விழா: டெல்லி வந்தனர் ராஜபக்சே, நவாஸ் ஷெரீப்! (படங்கள்)
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் டெல்லி வந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி வந்த ராஜபக்சேவுடன், அமைச்சர்கள் ஜி.எல்.பெரீஸ், ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் வந்துள்ளனர்.

டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார்.
இதேபோல் மோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

நவாஸ் ஷெரீப்புட வந்திருந்த அவரது மனைவி குல்சூம் நவாஸ், மகன் ஹுசைன் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் கொண்ட குழுவினரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் உயர் தூதர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ள நவாஸ் ஷெரீப், இந்த பயணத்தின் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ad

ad