புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

ஐ .பி.எல் இன்48வது தொடர்: வென்றது மும்பை 
 பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்48வது போட்டித்தொடரில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை
அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியிருந்தார்.
 
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்கள் நிறைவில் பஞ்சாப் அணி தனது 8விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பஞ்சாப் அணி வீரர்களின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில்,
 
எம் வோரா 34பந்துகளில் 1சிக்ஸர் அடங்களாக 36ஓட்டங்களையும்,
                                                           
 
பெய்லி 30பந்துகளில் 2சிக்ஸர்கள் அடங்களாக 39ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
 
                                                           
 
பதிலுக்கு 157ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்கள் நிறைவில் 3விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.
                                                          
மும்பை அணியை பொறுத்தவரையில்,
லென்டில் சிம்மன்ஸ் இன்றைய தொடரில் தனது பொறுமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் 61 பந்துகளில் 2சிக்ஸர்கள் அடங்களாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு வழியமைத்திருந்தார்.
 

ad

ad