அதிமுகவில் இருந்து
திருப்பூர் சி.சிவசாமி நீக்கம்!
திருப்பூர் சி.சிவசாமி நீக்கம்!
திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.
கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாகவும், அவருடன் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவில் மாவட்டச் செயலாளர் முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் சிவசாமி. கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதன்பின், 2009 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் களம் கண்டு வென்றார். எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சிவசாமிக்கு இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டி யிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.