புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோருமாறு முஸ்லிம் அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவு
மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இலங்கை தௌஹீட் ஜம்மாத் அமைப்பின் செயலாளருக்கு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பௌத்த தர்மத்தை தூற்றினார் என்ற குற்றச்சாட்டுக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை நீதிமன்ற முன்றலில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சிங்கள முஸ்லிம் மக்களிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவோரை தண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இலங்கை தௌஹீட் ஜம்மாத் அமைப்பின் செயலாளர் அப்து ராசீக் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்தார்.
தமது கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டமை தொடர்பில் மகாநாயக்கர்களை சந்தித்து விளக்கமளிக்க தாம் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ad

ad