புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014

வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் இலங்கை 
 இலங்கை - இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.  

 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தது.இந்த நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி மாற்றங்கள் இன்றி களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எவ்வாறாயினும் அலஸ்டையர் குக் குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை அணியை பொறுத்தவரையில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒரு சுழ்பந்து வீச்சாளரும் இணைத்துக்  கட்டாயம் களம் இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
 
இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளமானது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக அமையும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ad

ad