புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

ஐ.பி.எல் இன் (40)ஆவது ஆட்டம்: சுருண்டது மும்பை 
மும்பை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்  40ஆவது போட்டி தொடரில்...

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மும்பை அணிக்கு வழங்கியிருந்தார்.இதன்படி மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தனது 5 
விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
 
மும்பை அணி சார்பாக களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில்..
ரோஹித் சர்மா 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்களாக  51 ஓட்டங்களையும்,
 
                                                            
 
ராயுடு 1சிக்ஸர் அடங்களாக 27 பந்துகளில் 33 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். 
 
                                                            
 
பதிலுக்கு 141 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி தனது (18.4) நான்கு ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 141 ஓட்டங்னளை பெற்று வெற்றியடைந்தது.
 
இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரையில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு  RV உத்தப்பா வின் சிறப்பான துடுப்பாட்டமே காரணமான அமைந்தது எனலாம்.
RV உத்தப்பா 52 பந்துகளில் 3சிக்ஸர்கள் அடங்களாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
                                                             
 
மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ..
ஹர்பஜன் சிங் மற்றும் மலிங்கா இருவரின் பந்து விச்சு கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வேகத்தை  கட்டுப்படுத்தியிருந்தது எனலாம்.ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுக்களையும் ,மலிங்கா 1 விக்கெட்டினையும் இன்றைய ஆட்டத்தில் வீழ்த்தியிருந்தனர்.
 

ad

ad