திக்விஜய் சிங் - அம்ரிதாராய் காதலுக்கு
சங்கராச்சாரியார் எதிர்ப்பு!
சங்கராச்சாரியார் எதிர்ப்பு!
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங். மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 10 ஆண்டு காலம் முதல்–மந்திரி பதவி வகித்தார்.
இப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ளார். இவருக்கும் டி.வி. பெண் நிருபர் அம்ரிதாராய்க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக வடமாநில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் கள் கசிந்து வந்தன. அவர்களது தனிப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வந்தன. ஆனால் இருவரும் இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வந்தனர்.
இந்த நிலையில், அம்ரிதாராயுடனான காதலை திக் விஜய்சிங், மனம் திறந்து ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் அவர், ‘‘அம்ரிதா ராயுடனான எனது உறவு குறித்து ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை’’ என கூறி உள்ளார். இதேபோன்று அம்ரிதாராயும் அதே ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் திக்விஜய் சிங்குடனான காதலை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் திக்விஜய்சிங் கடந்த 11ம் தேதி நர்சிங்பூரில் உள்ள சங்கராச்சாரியார் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு சாமியாரின் காலுக்கடியில் சுமார் 30 நிமிடங்கள் கண்களை முடிக்கொண்டு சாமி கும்பிட்டார். திக்விஜய்சிங் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியை தொடர்ந்து பின்பற்றுபவர். டி.வி. பெண் நிருபருடன், திக்விஜய் சிங்கிற்கு தொடர்பு இருப்பதில் சங்கராச்சாரியார் அதிருப்தி அடைந்ததை அடுத்து திக்விஜய்சிங் அவரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆன்மிக குரு கடிந்துக் கொண்டதை அடுத்து குருவை சமாதானப்படுத்தும் முயற்சியில் திக்விஜய் சிங் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மன ஆறுதலுக்காகவும் சாமியாரிடம் திக்விஜய் சிங் வேண்டியதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த திக்விஜய்சிங் தற்போது அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன