புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


பாரியளவிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
20 முதல் 30 லட்ச ரூபா வரையில் அறவீடு செய்து நேபாளத்தின் ஊடாக ஐரோப்பிய, ஸ்கண்டினேவிய நாடுகளுக்கு நபர்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் வர்த்தகம் தொடர்பிலான
தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு பாரியளவில் பணத்தை செலுத்தி ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேனவிய நாடுகளுக்கு சென்று அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
இவ்வாறான சிலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
போரின் பின்னர் பலர் ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் போலி ஆவணங்களுடன் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad