சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட பிரதேச செயலகத்தின் கூரைகள்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் குடத்தனை அலுவலகத்தில் வீசிய சுழல் காற்றினால் அலுவலக கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் ஆவணங்கள் சிலதும் சேதமடைந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 7 மணியளவில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில் வெட்ட வெளியில் அமைந்துள்ள அலுவலகத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன.இதனால் மழை நீர் உட்புகுந்ததால் 3 கணனி உட்பட சில ஆவணங்களும் நனைந்து சேதமடைந்துள்ளது.