ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
பாடசாலை மாணவி ஒருவர் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுயில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதான பாடசாலையின் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
களுத்துறை - மருதானையில் இடையில் பயணிக்கும் குறித்த ரயிலில் பயணத்தை மேற்கொண்ட குறித்த மாணவி ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.