பஞ்சாப் அணி வெற்றி
-
ஐ.பி.எல். சீசன் 7இல் இன்று இரவு இடம்பெற்ற போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் அரைசதம் அடித்து அசத்தினார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 29 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். மேலும் சேவாக் 30, மேக்ஸ்வெல் 25, சஹா 17 ரன்கள் எடுத்தனர்.