புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


கூகுள் நிறுவனம் தயாரித்த ஸ்டியரிங் இல்லாத கார்! டிரைவர் தேவையில்லை கணினி மூலம் தானாக ஓடும்! 




கூகுல் நிறுவனம் ஸ்டியரிங் இல்லாத புது வகையான காரை தயாரித்துள்ளது. இந்த கார் கணினி மூலம் கார் தானாக ஓடும். டிரைவர் தேவையில்லை. தெற்கு கலிபோர்னியாவில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் டைட்டான் தொழில் நுட்ப இணை நிறுவனர் சர்கேபிரின் கூறும்பபோது,
கூகுல் நிறுவனம் 100 புரோடோ டைப் கார்களை தயாரிக்க உள்ளது. இந்த கார்கள் தானாகவே டிரைவிவ் செய்யும். ஆகவே இந்த காருக்கு ஸ்டியரிங் சக்கரம் தேவையில்லை. பிரேக் மற்றும் கேஸ் பெடல்களும் தேவையில்லை. சிறப்பு கருவிகள் மூலம் போக்குவரத்து சாலைகளில் இந்த கார் 1000 மைல் தொலைவுக்கு இயக்கி பார்க்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கூகுல் நிறுவனம் இந்த பிரோடோ டைப் மாடல் காரை தயாரித்துள்ளது. இது விற்பனைக்காக அல்ல. வாகன உற்பத்தியில் கூகுல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட விரும்பவில்லை. மற்ற நிறுவனங்களுடன் பங்குதாரர்களாகவே செயல்பட விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ad

ad