புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ். விஜயம்! முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்று் அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றம் வாணிபம் திணைக்களப் பணியாளர் க்ரேவ்ஸ், இலங்கையில் நடைபெறும் செயற்திட்டங்களுக்கு பொறுப்பான அலுவலர் ஆகியோர் வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய உதவியுடன் மேற்கொண்டுவரும் செயற்திட்டங்களை பார்வையிட வந்திருந்தனர்.
வடமாகாணசபை தங்களிடமிருந்து ஏதாவது உதவி எதிர்பார்க்கிறார்களா, வடமாகாண சபை தனித்து இயங்கப் போதுமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக தனித்து இயங்கப் பல முட்டுக்கட்டைகள் விதித்திருப்பதாக கூறி அவற்றை நான் எடுத்துக் கூறினேன். பிரதம செயலாளர் சம்பந்தமாகச் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பிரதம செயலாளர் அனுசரணையுடன் பதவிப் பொறுப்பை ஏற்க முடியுமென்றும் அவ்வாறு வடமாகாணத்தில் நடைபெறவில்லை எனவும் எடுத்துக்கூறினேன். எவ்வளவுதான் வடமாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக ஜனாதிபதியும் ஆளுநரும் கூறினாலும் அது நடைமுறையில் நடைபெறவில்லை என்பதையும் எடுத்துக்கூறினேன்.
ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் எமக்கு அவசரமாகத் தேவைப்படுவதை எடுத்துக் கூறியபோது அது சம்பந்தமாகப் பரிசீலித்து தாம் ஏதேனும் உதவி செய்வதாக உயர்ஸ்தானிகர் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள், வறியவர்கள், வறுமையில் வாடுவோர் தொடர்பான திட்டங்களை அவர்களின் வாழ்க்கையில் மேன்மை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறினேன்.  எவ்வகையான வழிகளில் இவர்களுக்கு உதவலாம் என்பதையும் தெனிவாக விளக்கிக் கூறினேன்.
வடமாகாணத்தில் மிகப்பெரிய பிரச்சினை நீர்வளம் மற்றும் நிலவளம் என்பவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்து விளக்கினேன். அரசாங்கம் தமக்குத் தேவையான யெற்திட்டங்களைச் செயற்படுத்த முன்வருகிறார்களே தவிர மக்களுக்குத் தேவையான செயற்திட்டங்களை மக்களின் பிரதிநிதி மூலம் அறிந்து செயற்படுத்த முன்வருவதில்லை என விளக்கினேன்.
கூட்டம் இனிதாக நிறைவெய்தியது. பின்னர் அவர்கள் கிளிநொச்சி செல்வதாக கூறினர். அங்கு தமது செயற்திட்டங்களைப் பார்வையிட்ட பின்னர் கொழும்பு திரும்புவதாக கூறிச்சென்றனர்.

ad

ad