மன்னார் குருவில்வான் கிராம மக்களை வெளியேற வனவள ஜீவராசிகள் திணைக்களம் உத்தரவு
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்ற குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எது
வுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையிட்டு இந்தக் கிராம மக்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளதுடன் இதுவிடயமாக சில முக்கியஸ்தர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று இப் பிரச்சினைக்கான நிவாரணமும் வேண்டி நிற்கின்றனர்.
இதுபற்றி தெரியவருவதாவது:
காணிஅபகரிப்பின் ஒரு அங்கமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ப
ட்ட குருவில்வான் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளி
யேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்
ளது.
இவ் அறிவித்தலை தொடர்ந்து குறித்த பகுதியில் வாழ்ந்துவரும் 14 குடும்பங்களை சேர்ந்த குடியிருப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விடயம் மன்னார் பிரஜைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மன்னார் பிரஜைகள் குழுவின் உபதலைவர் எஸ்.சகாயம் தலைமையிலான குழு இசமூகசேவகர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மார்டீன் டயஸ் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை குறித்த பகுதிக்கு சென்று பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
42 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் மக்களாகிய எங்களை எதுவித முன் அறிவித்தலுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என கவலையுடன் அந்த மக்கள் அங்கு சென்ற குழுவினரிடம் தெரிவித்தனர்.
குறித்த குருவில்வான் கிராமம் செழிப்புமிக்க மண் என்பதாலும் இங்கு பல தொழில்களை செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளதால் குறித்த பகுதியில் உள்ள தமிழ் மக்களை அகற்றிவிட்டு இப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதற்கான நடவடிக்கைகளை இராணுவம் இப்பகுதியில் மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வீடுகளின் முன் அமைந்துள்ள நுழைவாயில் பகுதி உட்பட பல இடங்களில் இது இராணுவத்திற்கு சொந்தமான இடம் என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பலகைகள் இராணுவத்தினரால் போடப்பட்டுள்ளதோடு அவர்களை குறித்த காணிகளை விட்டு விலகிச்செல்லுமாறு அச்சுறுத்தி வருவதோடு காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
எமது மூதாதையர்கள் வாழ்ந்து வந்த மண்ணிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம் இராணுவமோ அல்லது வனவள ஜீவராசிகள் திணைக்களமோ எம்மை எமது பூர்வீக காணியிலிருந்து அகற்ற முடியாது. இப்பகுதியை விட்டு நாம் ஒருபோதும் வெளியேறப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொண்ட பிஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் குறித்த பகுதியைசுற்றி பார்வையிட்டதுடன் இந்த மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆலோசனையினை மக்களுக்கு வழங்கியுள்ளதோடு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.