புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


பிரபல தொலைக்காட்சி நடிகை விபச்சார வழக்கில் கைது. 3 இளைஞர்களுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.
மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிஜி என்பவர் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று இளைஞர்களுடன் பிரபல ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக
குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 மலையாள தொலைக்காட்சிகளில் பிரபலமான மூன்று சீரியல்களில் நடித்து வரும் ஷிஜி, கைது செய்யப்படும்போது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன் இருந்த மூன்று இளைஞர்கள் ஜஸ்டின், மனோஜ், ஜான்சன் ஆகியோர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டயம் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்கள் நான்கு பேர் மீதும் விபச்சார தடுப்புச்சட்டத்தின் கீழ் உள்ள பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கோட்டயம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 நடிகை ஷிஜி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் நடித்துக்கொண்டிருக்கும் சீரியல்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக போலீஸார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத் ஓட்டல் ஒன்றில் வங்காள நடிகை சுகன்யா சாட்டர்ஜி கைதானது குறித்து குறிப்பிட்ட போலீஸார், வாய்ப்பு குறையும் சில நடிகைகள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றும், அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுத்து அவர்கள் கெளரவமாக வாழவைக்க சமூகம் முயற்சிக்க வேண்டும் என்றும் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ad

ad