புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி விடுத்த அழைப்பை  நிராகரித்தார் விக்னேஸ்வரன் கடிதங்கள் இணைப்பு 
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் முதலமைச்சர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லமாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி எதிர்வரும் 26ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி, தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்து விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
23-05-2014
கௌரவ பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர், வெளிவிவகார அமைச்சர்
கௌரவ அமைச்சரவர்களுக்கு,
இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன்.
ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுனமே.
வடமாகாண மக்களின் சொல்லொணாத் துயரங்கள்,  வடமாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக்கூட்டுறவுச் சிந்தனையானது வரவேற்கத்தக்கது.
எனினும் உங்களுடைய அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக் காட்டக்கூடும் என்பதேயாகும். எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகிறார்கள் என்பதும் வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனபதுமே உண்மை நிலையாகும்.
இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக்கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக் கொள்வதாக அமையும். எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரூடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத் தருகின்றேன்.
உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால்  பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உழைப்பும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்தான வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவன மட்டுமன்றி எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன.
நன்றி
அன்புடன் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

ad

ad