புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


பாஜக கூட்டணி கட்சி கூட்டம்: விஜயகாந்த்–அன்புமணி பங்கேற்பு
டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டணியில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது.


தமிழ்நாட்டில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த தே.மு.தி.க, ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது.
இதையடுத்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, ஐ.ஜே.கே.தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்–அமைச்சருமான ரங்கசாமி ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் பா.ஜனதா கூட்டணி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தர்மபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி ஆகியோர் ஏற்கனவே டெல்லி சென்று மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசினார்கள்.
திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மலர் மன்னன் மரணம் அடைந்ததால் வைகோ அவசரமாக சென்னை திரும்பினார். அவருக்கு பதிலாக கணேசமூர்த்தி கலந்து கொள்கிறார். டெல்லியில் இருக்கும் அன்புமணியும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ad

ad