துரைமுருகன் 13–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் கடந்த 2011ம் ஆண்டு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது துரைமுருகன், அவரது மனைவி மீது அளவுக்கு
அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குபதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு வேலூர் தலைமை நடுவர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி குருவய்யா முன்னாள் அமைச்சர் துரைமுருகனை வருகிற 13–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.