புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014


துபாய், கேரளாவில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது
1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்தச் சம்பவம் தொடர்பாக ஹைதர் அலி என்ற இன்ஜீனியர் ஹைதர் அலி (45) உள்ளிட்ட 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த ஹைதர் அலி தலைமறைவானார். 
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 1993-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹைதர் அலி உள்ளிட்டோரைத் தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து கோவை உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், இந்து அமைப்பைச் சேர்ந்த சில தலைவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஹைதர் அலி, பாட்ஷா உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், ஹைதர் அலி எங்கே இருக்கிறார் என்பது குறித்து போலீசாருக்கு எந்த விதமான தகவலும் சேகரிக்க முடியவில்லை.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹைதர் அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு தலைமறைவாக இருந்த ஹைதர் அலியை கைது செய்தனர்.
கோவை பெரிய கடைவீதி போலீஸார் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹைதர் அலியை, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்தியச் சிறையில் அடைத்தனர். அடுத்து ஹைதர் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல, தலைமறைவாக உள்ள அபு பக்கர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் ஹைதர் அலியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பிடிபட்ட ஹைதர் அலி, சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 8 ஆண்டுகள் வசித்து வந்ததாகவும், அதன் பின் கேரளம் திரும்பியதாகவும் முதற்கட்ட விசாரனியில் தெரியவந்துள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அங்கிருந்த பொது, ஹைதர் அலி சந்தித்த ஆட்கள் மற்றும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ad

ad