புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை? -வெங்சர்க்கார் சுட்டிக்காட்டு 
news
இங்கிலாந்து அணியை 2 இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

 
தனது சொந்த கிரிக்கெட் அகாடமிக்காக இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்யும் விழாவில் பேசிய
வெங்சர்க்கார் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை 2 இன்னின்ங்ஸ்களிலும் ஆட்டமிழக்க செய்தால்தான்
 வெற்றி பெற முடியும்.
 
4 பந்து வீச்சாளர்களைத்தான் நாம் தெரிவு செய்வோம் இதில் 2 பவுலர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் 10
விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது அவசியம் இந்த அணியில் அத்தகைய திறமையுடைய பவுலர்கள்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
 
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கடினமாக இருக்கும் ஏனெனில் பிட்ச் வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் 
பற்றி நமக்கு ஒன்றும் புரியாது இந்திய அணி நல்ல தயாரிப்புடன் செல்லவேண்டும்.
 
மேலும் 2 பயிற்சி ஆட்டங்கள் மிகக் குறைவு முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன்னர் குறைந்தது 4 அல்லது 5 பயிற்சி ஆட்டங்களாவது வேண்டும்.
 
கோடையின் ஆரம்பக் கட்டத்தில் இந்தியா அங்கு செல்கிறது. அப்போது பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். இளம் வீரர்கள் அந்தச் சூழலுக்குத் தக்கவாறு விரைவில் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad