37 அதிமுக எம்.பி.க்கள் டெல்லி பயணம்
நரேந்திரமோடியை சந்திக்க ஜெயலலிதா 3ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
இதையொட்டி தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும், ஏற்கனவே உள்ள 10 மேல்–சபை எம்.பி.க்களும் நாளை (திங்கள்கிழமை) டெல்லி செல்கின்றனர். இது தவிர தமிழக மூத்த அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.கே.டி.ஜக்கையன், உயர் அதிகாரிகள் ஆகியோரும் டெல்லி விரைகிறார்கள்.
3ந் தேதி நரேந்திரமோடியை சந்தித்து தமிழக வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க ஜெயலலிதா மனு கொடுக்கிறார். அன்று மாலையே அவர் சென்னை திரும்புகிறார்.
புதிய எம்.பி.க்கள் 37 பேரும் பாராளுமன்றத்தில் பதவி ஏற்ற பிறகு சபை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்பார்கள்.