புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014


ஒரே நாளில் சகோதரிகள் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் மீண்டும் பயங்கரம்
உத்தரபிரதேசத்தின் இடா மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியாபூர் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய சகோதரிகள் 2 பேர் வியாழக்கிழமை மாலையில் அருகே உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றனர். அவர்களை வழிமறித்த 3 வாலிபர்கள், சகோதரிகள் இருவரையும் அங்குள்ள வயல்வெளிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

மேலும் பைரோசாபாத் மாவட்டத்தின் பரிகா பகுதியில், தனது வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள்.
இதைப்போல மகராஜ்கஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட நட்டன்வா பகுதியில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியை, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் 2 பேரை, கடந்த மாதம் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டனர். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்கு வியாழக்கிழமை மட்டும் 4 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad